காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளவர்களுக்கு.

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடிப்பதற்கான அரசாங்க வர்த்தமானி வெளியாகி உள்ளது.

அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரையான காலப்பகுதியில் காலவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்கலின் செல்லுபடியாகும் காலம் மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்பட உள்ளது. ஏற்கனவே காலாவதியாகி செல்லுபடியாகும் காலம் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு இது செல்லுபடியாகாது எனவும் மேற்படி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love பகிர்ந்து கொள்ள