2021 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளது – உயர்கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ்

கோவிட் – 19 தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளது. அதற்கான திகதியும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உயர்கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டன.

அதன்படி 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற இருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர( GCE O/L) பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாவது வாரமும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் (GCE A/L) பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் தேதி முதல் அதே மாதம் 30ஆம் தேதி வரைக்கும் நடைபெறும் அதேவேளை இந்த ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிசில் பரீட்சையில் அக்டோபர் மாதம் 3வது ஞாயிறு நடைபெறும் எனவும் உயர்கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

Spread the love பகிர்ந்து கொள்ள