நவ்பர் மௌலவிதான் பிரதான சூத்திரதாரி என அறிவித்து விசாரணைகளை நிறைவு செய்வதற்கு அரசாங்கத்தின் முயற்சியா? ஹர்ஷ டி சில்வா

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக பிரதான சூத்திரதாரி கண்டுபிடித்து விட்டதாகவும் கூறிய கருத்துக்கு நேற்று(8) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது உரையில் நவ்பர் மௌலவிதான் பிரதான சூத்திரதாரி என அறிவித்து விசாரணைகளை நிறைவு செய்வதற்கு அரசாங்கம் முயல்வதாகவும் மேலும் பிரதான சூத்திரதாரி அரசாங்கம் மறைப்பதற்கு முயல்வதாகவும் பல ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியா அட்மிரல் சரத் வீரசேகர கூறிய கருத்துக்கு இதே நிலைப்பாட்டில் தமது உரைகளில் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Spread the love பகிர்ந்து கொள்ள