நீர்கொழும்பில் பிரேத அறையில் வைக்கப்பட்டவருக்கு திடீரென உயிர் வந்த அதிசயம்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்ட பின் உயிர் பிரிந்தவருக்கு திடீரென உயிர் வந்த அதிசயம்.

40 வயது மீனவர் ஒருவர் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை நேற்று (09) நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயக்கத்தில் இருந்த மேற்படி நபரை பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்து பிரேத அறைக்கு கொண்டு செல்லும்படி பணித்துள்ளார்.

திடீரென கைகால்கள் அசைவதைக் கண்ட வைத்தியசாலை ஊழியர்கள் திரும்பவும் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ள வேளை மேற்படி நபரின் உடம்பில் சீனியின் அளவு குறைந்ததன் காரணமாக இவர் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக மேலதிக பரிசோதனையின்போது உறுதியாகியுள்ளது. பின்னர் உயிரிழந்ததாக தெரிவித்த வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Spread the love பகிர்ந்து கொள்ள