எதிர்வரும் 21ஆம் தேதி காலை 8 : 45 மணிக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக எதிர்வரும் 21ஆம் தேதி காலை 8 45 மணிக்கு அனைத்து தேவாலயங்களிலும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு மாவட்ட பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டார்.

கத்தோலிக்க மக்கள் மட்டுமன்றி அனைத்து மத தலைவர்கள் அவர்களின் வணக்கம் வழிபாட்டுத் தலங்களில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி தம்மோடு இணைந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். இது ஒரு தேசியப் பிரச்சினையாக கருதி எதிர்வரும் 21ம் திகதி கத்தோலிக்க பாடசாலைகள் விடுமுறை என்பதால் அந்த மாணவர்களுக்கு உயிர் நீத்தவர்களுக்காக மௌன அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

Spread the love பகிர்ந்து கொள்ள